search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க.வினர் போராட்டம்"

    தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து கருப்பு கொடி காட்டி முற்றுகையிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்து பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட நகர செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன்,  ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற  உறுப்பினர் ஸ்டாலின்குமார் தலைமை யில்  சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், நகர செய லாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் துறைïர் அண்ணா துரை, உப்பிலியபுரம் முத்துசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், இளைஞரணி  கிட்டப்பா, பிரபு மும்மூர்த்தி, முன்னாள் கவுன் சிலர்கள் மனோகர், கார்த்தி, அன்பு காந்தி, செங்கை அசோகன், அசோக்குமார் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர்கள் சேட்டு,  வெங்கடாச்சலம், சத்தியசீலன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு, கீரனூர் பேரூர் கழக பொறுப்பாளர் வக்கீல் அண்ணாத்துரை, மண்டையூர் பாண்டியன், வக்கீல் ராமையா, ஜி.டி.எஸ்.இளவரசன், பன்னீர்செல்வம், கே.ஆர்.பி. ஜெயச்சந்திரன், முருகேசன், குமரவேல், ராஜ் குமார், ஜெயகாந்தி, பேராசிரியர் குறிஞ்சி வாணன், கிருஷ்ணமூர்த்தி, இம்தியாஸ்,பொறியாளர் பாலா, குளத்தூர் மணி ராஜன், கார்த்திக், சவுந்தர் ராஜன் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    ×